செவ்வாய், 22 மார்ச், 2022

 எமது பாடசாலையான கமலாம்பிகை வித்யாலயத்துக்கு சுவிஸில் வாழும் திரு. சந்திரபாலன்(புங்-8) அவர்கள் வருகைதந்துபோது...

நமது பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் பாடசாலை புனரமைப்பு சம்பந்தமாக கேட்டறிந்து பல உதவித்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளார்.
இவ்வருடம் பெப்ரவரி மாதம் திரு. சந்திரபாலனால் ஆரம்பிக்கப்ப்ட ''கண்மணி கல்விக்கொடை''யின் இந்த மாத பங்களிப்பு நிகழ்வில் சந்திரபாலன் அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு தரம் 6 முதல் தரம் 11 வரை 1 ஆம் 2 ஆம் 3 ஆம் இடத்தை பிடிக்கும் 18 மானவர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
இந்திட்டத்தின் மூலம் ஒவ்வொருமாதமும் 18 ஆயிரம் ரூபா திரு. சந்திரபாலன் அவர்களால் கமலாம்பிகை வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதைவிட பள்ளி கூடத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் அவரின் நிதியுதவியுடன் தொடங்கப்படுகிறது.
திரு. சந்திரபாலன்நமது ஊருக்கு பல உதவிகளை செய்துவருகிறார்
அவருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயத்துக்கு நவீன பேரூந்துநூலகம் அன்பளிப்பு!!

 

‘பேருந்தில் இருந்து எதிர்காலத்திற்கு’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு பேருந்து நூலகம் வழங்கப்பட்டு இன்று 25,02,2022 வெள்ளிக்கிழமை காலை வேளையில் புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் நூலகப்பேரூந்து சேவை தொடங்கப்படுகிறது .
அதற்கான பேரூந்து இன்றைய தினம் நமது பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டு, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பேரூந்து நூலககத்தின் உள்ளே நவீன வடிவிலான பிள்ளைகளை மகிழ்விக்கும் முறையில் அமைக்கப்பட்ட இருக்கைகள் , படிக்கும் வசதிகள், களஞ்சிய அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்ட்டிருப்பது விசேட அம்சமாகும்.
இந்த சேவை இங்கே வர உழைத்த அன்புள்ளங்களுக்கும், இந்த பேரூந்திணை
நிறுத்தி வைக்க அழகான தரிப்பிடத்தை அமைத்துக்கொடுப்பதற்கு நிதியுதவி வழங்கிய பின்வரும் கனடா வாழ் பாடசாலை பழைய மாணவர்களிற்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் என்றென்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.
திரு.சின்னதம்பி கனகலிங்கம் (புங்-8) 200.00 $
திரு.சுப்பிரமணியம் பத்மநாதன்(புங்-7) 200.00 $
திரு.திருநாவுக்கரசு கருணாகரன்(புங்-8) 250.00 $
திரு.மார்க்கண்டு தனபாலன் (ஆசிரியர்) (புங்-8) 250.00 $
திரு.மார்க்கண்டு மோகனபாலன் (புங்-8) 250.00
திரு.நல்லையா தர்மபாலன் (முன்னாள் புங்/மத்திய மகாவித்தியால அதிபர்) (புங்-8) 250.00
SLT மொபிடெல் நிறவனம் ஈ – நூலக வசதிகளை வழங்கியுள்ளதுடன், அதன் மூலம் மாணவர்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ளவும் ஈ – நூல்களை கற்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
இலங்கை போக்குவரத்து சபை, SLT மொபிடெல், மனுசத் தெரண மற்றும் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை ஆகியன இந்த நூலக திட்டத்திற்கு அனுசரணை வழங்கியுள்ளன.
போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாது என ஒதுக்கப்பட்ட பழைய பேருந்து வண்டிகளை புதுப்பித்து பிள்ளைகளை கவரும் வகையில் நூலகம் இல்லாத பாடசாலைகளுக்கு நூலகங்கள் வழங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக , புதுப்பிக்கபட்ட 20 பேருந்துகள் 20 பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நூலக பேருந்துகள் வழங்கப்பட்ட பாடசாலைகளுள் 5 தமிழ் பாடசாலைகளும் உள்ளடங்குவதுடன் அவையாவன,
துணுக்காய் – ஐயன்கன் குளம் மகா வித்தியாலயம்
மன்னார் – அல் மனார் மகா வித்தியாலயம்
மட்டக்களப்பு – அம்பிலான்துறை மகா வித்தியாலயம்
யட்டியாந்தோட்டை – கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயம்
யாழ்ப்பாணம் – புங்குடுதீவி கமலாம்பிகை வித்தியாலயம்
வவுனியா – சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம்
யாழ் மாவட்டத்தில் நமது பாடசாலைக்கு மாத்திரமே நூலகப் பேருந்து வழங்கப்பட்டுள்ள்மை குறிப்பிடத்தக்கது.

சனி, 15 மே, 2021




 










































புங்குடுதீவு கமலாம்பிகையில் கண்மணி கல்விக்கொடைத்திட்டம் ஆரம்பம்
............................................................................................................
==புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகாவித்தியாலயம் .
==01.02.2021 திங்கட்கிழமை காலை 10.30 மணி
தரம் 6 முதல் தரம் 11 வரை தவனைப்பரீட்சையில் முதல் மூன்று இடங்களுக்கு தேர்வுறும் 18 மாணவர்களுக்கு அவர்களின் திறனை மென்மேலும் ஊக்குவிக்குமுகமாக மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாவினை நன்கொடையாக வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவுள்ளது மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
விதிமுறைகள்




------------------------------------------------------------------
நோக்கம் .
.....................
 பாடசாலையின் மாணவர்களின்  கல்வி திறனை  மேம்படுத்துமுகமான  ஊக்குவிப்பு 
அனுசரணை 
.................................
புங்குடுதீவு  8  இல்  வாழ்ந்து மறைந்த  திருமதி  சிவசம்பு கண்மணி  அவர்களின் ஞாபகார்த்தமாக  அவரது  புதல்வன்  சுவிஸ்  வாழ்  சிவ-சந்திரபாலன் அவர்களால்  வழங்கப்படும் 
 விதிமுறைகள்
............................. 
புங்குடுதீவு  மடத்துவெளி  கமலாம்பிகை  மகா வித்தியாலயத்தில்   தரம்  6  முதல்  தரம்  11   வரையிலான வகுப்புகளில் ஒவ்வொரு தரத்திலும் தவணைப்பரீட்சைகளின் முடிவில்  முதல் மூன்று  இடங்களை பெறுகின்ற  மாணவர்களுக்கு  தலா  ஆயிரம்  ரூபாவினை  பணமாக வழங்கவுள்ளோம் .இந்த கொடுப்பனவு 
மாதந்தோறும்  வகுப்பு  ஆசிரியர்களினதும் அதிபரினதும்  முறையான தரவு  படிவத்தில்  பெற உரித்துள்ள  மாணவர்களின் கையொப்பத்துடன்  வழங்கப்படும வகுப்பாசிரியர் அல்லது  அதிபர் முடிந்தவரை  இந்த கொடுப்பனவு  பெற்றோர்  சம்மதத்துடன் அல்லது பெற்றோரினால் உரிய முறையில் செலவு செய்யப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும் 
கொடுப்பனவு பெறுகின்ற மாணவர்கள் அதனை  கற்றல் உபகரணங்கள் , மேலதிக புத்தகங்கள் , ஆடை ,காலணி,  காலுறை ,அன்றாட உணவுத்தேவை, பிரத்தியேக  வகுப்புக்கான  பயணச்செலவு போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்   காலக்கிரமத்தில் இந்த கொடுப்பனவு  உரிய முறையில் பயன்படுத்தாமல்  எதாவது  துஸ்பிரயோகம் செய்யப்படுவது அறியப்படடால்   பொருட்களாக  வழங்கும் நிலை  ஏற்படலாம்   மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆசிரியர்கள் அதிபர்  ஆகியோர்  முறைகேடுகள் பற்றி  நேரடியாக  மின்னஞ்சல்  ,வைபர் , ,தொலைபேசி மூலம் அறியத்தரலாம் , உங்கள் முறைப்பாடுகள்  மிக மிக  ரகசியமாக பேணப்படும் pungudutivu1@gmail.com 0041791200006,
நடைமுறைப்படுத்தல் 
...............................................
வருடத்தின் மூன்று  தவணைப்பரீட்சைகளின்  முடிவில்  ஒவ்வொரு வகுப்பிலும்  எல்லாப்பாடங்களினதும் மொத்த புள்ளிகளின் தரவரிசையில் /பிள்ளை  1 ஆம்  2 ஆம் 3 ஆம் இடங்களை பெறுவோருக்கு ஒவ்வொருமாதமும் அதற்கானபடிவத்தில்  கையொப்பம் பெறப்பட்டு இந்த ஆயிரம் ரூபா  வழங்கப்படும் அதாவது  ஒரு தவணைப்பரீட்சை  முடிய கிடைக்கும் பெறுபேறுகளின் மொத்தபுள்ளிகள்  தரவரிசை   படி  1 ,2 ,3 ஆம் இடங்களை  அடைந்தோருக்கு தொடர்ந்து  மாதம் தோறும் வழங்கப்படும் அடுத்த தவணை பரீட்ச்சை  முடிவு வரும் வரை   இந்த பெயர் பட்டியல் மாறாது .  மீண்டும் அடுத்த தவணை பரீட்சை  முடிவின் படி  தொடரும் அப்போது பெயர்பட்டியல் மாற  வாய்ப்புண்டு 
வழங்குநர் மற்றும்  நெறியாளர்கள்
......................................................
 சுவிஸ்  வாழ்  சிவ.சந்திரபாலன்  தனித்து இந்த  அறக் கடடளைக்கான   நிதியை  வழங்குவார் . இதனை செயல்படுத்திலும் ஆலோசனை வழங்குவதிலு ம்  கொடுப்பனவு விநியோகம்  செய்வதிலும்திரு கிருஸ்ணபிள்ளை பாஸ்கரன்  ஆகியோர் பங்களிப்பார்

 


வெள்ளி, 1 மார்ச், 2019